உலகின் அதியுயர் நிறுவனமான அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு உற்பத்தி முகாமையாளராக யாழ்ப்பாணம் வல்வெட்டித் துறையை சேர்ந்த இளைஞனுக்கு (Product Manager) ஆக பணியாற்றுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வல்வெட்டி துறையைச் சேர்ந்த ஜெகதீஸ் சிதம்பர தாஸ் என்ற இளைஞனுக்கே இந்த வாய்ப்புக் கிடைத்து உள்ளது.
இவர் இங்கிலாந்து நாட்டின் Imperial College இல் MEng Electrical & amp; Electronic Engineering படிப்பை முடித்த இவர், படிப்பு முடிந்ததும் இங்கிலாந்தின் பெருமைக்கு உரிய Royal Academy of Engineering வழங்கிய £50,000.00 பெறுமதி ஆன fellowship விருதை வென்றார்.
இவர் இந்த விருதின் மூலம் தன்னை உயர்த்தும் ஒரு தொடக்கமாகப் பயன்படுத்தி அதன் ஊடாக அமெரிக்காவில் உள்ள உலகம் போற்றும் Massachusetts Institute of Technology (MIT) இல் கற்பதற்கு ஒரு வாய்ப்பைப் பெற்றுக்கொண்டு 2018 இல் தனது MBA பட்டப் படிப்பை தொடங்கி தற்போது அதனை நிறைவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்தமாதம் நடந்த பட்ட மளிப்பு விழாவில் Seley Scholarship எனும் ஓர் உயர் பட்டத்தை பெற்று Student Speaker ஆகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெகதீஸ் தனது வெற்றியின் மூல காரணம் தன் மனைவி யாழினிஜெகதீஸ் மற்றும் தனது மகள் இருவரும் என தனது MIT பேட்டியில் கூறி உள்ளார்.
மேலும் கூகிள் தலைமையகத்தில் ( Google Headquarters) இல் ஓரு நாள் பதவி ஏற்பேன் என சிறு வயதிலேயே கனவு கண்டு இருந்தேன், அதை தனது இளம் வயதிலேயே சாதித்து உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.